ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

Adi Annamalaiyaar Temple

 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை
ஆதிஅண்ணாமலையார்  ஆதி உண்ணாமுலை அம்மன் திருக்கோயில்
 
Adi Annamalaiyaar Temple, Girivala pathai, Thiruvannamalai 


திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. இறைவியின் திருநாமம் உண்ணாமுலையம்மாள். பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர் இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவாகும். அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது .

               திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து.  இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர்.
படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.
 

        மூலவர் :    ஆதி அண்ணாமலையார்

        அம்மன்:    ஆதி உண்ணாமுலையம்மை

        ஊர் :        அடி அண்ணாமலை

        மாவட்டம் : திருவண்ணாமலை


திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. 



ஆதிஅண்ணாமலையார்  ஆதி உண்ணாமுலை அம்மன் திருக்கோயில் தல வரலாறு:

சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா :

 ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். 

மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது.

அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.
 
 
 


ஆதி அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு :


அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் என்னும் திருத்தலம்மாகும் . நினைத்தலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.

திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.

இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக